Sunday, July 20, 2014

அன்றியும் பரிமாணம் நிகர்த்து

யாதொரு பிம்பம் என்றே
ஆய்ந்ததில் முப்பரிமாண
அடையாள பிரதிமை
எனவும் இடமாற்ற
வியாபிப்பில் பரிமளிப்பது
எனவே தெருள
தன்முன் பிறிது எனும்
பொருள் கணச் சேர்க்கையில்
வியாசம் வழுவ அலகாக
அயல் நிகர் அப்பால் நிகழ்
வெளிச் செருகல் எதுவும்
சிறுதுகள் வேதிக் கலப்பில்
இயல்வதாய் பண்புற
இகத்திலும் பரத்திலும்
மெய் இயற்றும் புனைவாய்
கமழும் கூடின் வசம்
திகையும் கற்றையின்
பான்மை திளைக்கும்
இருப்பென்றும் இன்மையென்றும்
தலைகீழ் விகிதமாய் எடைகூடி
அணுவின் பிளவில் மொய்ம்புற்று
தேகமாய் பின்னலாய் கொடியாய்
பிரிவதுவும் இணைவதுவும்
இன்னினது பெயர் வரையா
புலன் பாவிக்கும் புலம்

No comments: