Monday, October 6, 2014

நீதியின் செலவாய்...

சருமத்து மீட்டிய
சுகித்து முயங்கும்
கருவியின் சிணுங்கலில்
எதிர் முனை குவியும்
தன் நயப்பை வழிய
உறியும் எண்கணித
வாய்ப்பாடும் தடைபட
கேளலும் களிப்பாய்
சொன்மையும் உள்சுழிப்பாய்
இன்கண் என்றே ஒலித்து
ஆட்டம் துவங்கி
உச்சத்தின் இறுதிவரை
சொப்பன உயவில்
உள்ளின் உள்ளில்
மானத்தை மீட்காத
வலியின் நுகர்சாயல்
ரூபத்தின் பிளவதனை
தவிர்த்து விலக்கி
பொய்யன்ன புனையும்
போகச் சருக்கம்
நீதியின் செலவாய்
தீர்த்தலில் மிகும்

No comments: