Sunday, October 26, 2014

உம் எனும் ஓசைத்துளி

ஓர் பொருள் ஓர் நிறை
பாவின் உள்ளில்
ஊற்றெடுக்கும்
கவியின் கலி

ஓர்மையில் சிரத்தையும்
மேலாய் கீழாய்
இடமாய் வலமாய்
அசைத்தும் நகர்த்தும்
சொல் விளையாட்டு
என குறுக

உறக்கமும் மேவிடாது
இரையும் ஆட்டுவித்து
கிடக்கை அறிவிக்கும்
பூனையின் மெல்லொலி

சிறு பூவும் மலர
மகரந்த விதியின்
செறித்தலோடு ரீங்கரிக்கும்
மென்பொன் வண்டாய்
உருவகித்து

சலிக்கும் பொருண்மை
யாவும் சலித்து
மரபின் உசாப்பு
தவிர்த்து இலங்கி
இங்கு அளபெடையில்
வரிந்திருக்கும் ஓசைத்துளி

No comments: