Monday, November 3, 2014

புள்ளின் அசைவு

மண்ணில் புதைந்த
சிரத்தை மீட்டு
வானின் மையத்தை
தேடும் அலகுடன்
சிறுமென் நடைநடந்து
துள்ளும் மீனைக்கவ்வி
இயல்பென் ஆக்கத்தில்
தம்மையும் இணைத்து
மேகத்தின் அசைவதனை
மெய்யில் ஏற்றி
தன்னில் பிரிந்த
தனதின் நிழலும்
விசும்பில் படிந்ததாய்
வினை பயின்று
தானும் தன் பிம்பமும்
பரிமாண வெளியில்
அலையும் பேற்றினை
வடிப்பதனை பாவை
இயற்றும் திறம்யாதென
புள்ளின் மொழியில்
பெயர்த்து புகல்வதும்
பொருளின் சான்று
எனவே கிளைத்து
வரித்தது இங்கண்

No comments: