Sunday, November 23, 2014

உயிர் நிகழும் பருவம்

முற்றத்து நெடிதுயர்ந்து
கிளை பரப்பி நீள
செம்மலர் வளர் பருவம்
நகைத்து முரணாக்கி
தளிர் இலை சொறிந்து
விடுதலை யுணர்த்தி
செப்பும் அலையில்
வளி மீதுலாவி
இடர் அறிந்து
அகத்தின் வாசம்
மெல்லியதாய் பகிர்ந்து
இளம் முறுவல் அறிய
முகம் யாதென்று
காணா வளைவில்
படிந்தது குணம்
பச்சையின் இயல்பாய்
இரவில் செழித்து
ஒளியில் செறிந்து
எண்கோடி அணுவும்
மண் பிரிந்த நீராய்
வேரின் பிடிப்பில்
நிலைத்திருப்பதாய்
நகரும் கனவும்
உய்விப்பதாய்
அடரும் கானகம்
விருப்பின் புள்ளியாய்
வான் மறைத்து
இருளின் துணையுற்று
முளைத்த கணம்
இதுவென் திளைக்க

ஏட்டில் விளைந்ததாய் கனிந்ததாய் வர்ணிக்கும் இவ்வுயிர் நிகழும் தருணம் யாவிலும் நிறையும் என பரிணமிக்க.