Sunday, November 30, 2014

வனம் சிலிர்க்கும்

கூர்வேனில் குத்தும் தணல்
வெண்மதி தொடரும் பின்னந்தி
முகில் நிழல் மறைக்கும் பாதை
செவ்வண்டு இசை ஒலிக்கும்
பாதை துவளும் கொடியும் நுடங்கி
இலையும் உதிர்ந்து சலசலக்க
முயல் துள்ளி மரம் புகும்
கோண்மா நதி பாய்ந்து தளர
மின்னலென ஒளிரும் அணங்காய்
கிளை தாவி கூவென கூவ
அதிரும் பட்சியும் அடங்கி குமுற
சில்லென்னும் வளியும் பெயர
கானமும் செவியுறாது முடங்க
அடர் வலி போக்குமோ ஆரிருள் தனித்து

2 comments:

arangamallika said...

Vanam silirkum kavithai adarthi athigam.sanga kavithaiyin sayal ullathu

Mubeen Sadhika said...

thx arangamallika