Monday, August 5, 2013

கரையும்

காக்கும் சொல்லும் கரையும்
பெரு மழை பொழிவில் மண்ணாய்
நீலச்சுழல் ஆழ மாக்கடலின் உப்பில்
துளியின் கணுவில் கலந்த நேசம் போல்
விழுந்து உருண்டு ஆவியாய் நீளும்
விழி வழியில் நிர்கதியாய் தவித்து
பன்னிரு பல்லாண்டும் உறைந்து
அனல் கவ்வி அமிழும் அமிலமாய்
வினை நிகழ்த்தி வண்ணத்தில் பிரிந்து
வானின் வில்லில் சிதையும் நெடிது
ஏதுமற்று துறக்கும் நெறியும் அணைத்து
உளதாய் இலதாய் கண்டு தெளிவித்து
வளியின் நிறம் மூச்சில் இருத்தி
மீனின் போக்கும் உணர்ந்ததாய் கூறி
மரிக்கும் பொழுதைக் குறித்துக் காட்டும்
நாமத்தின் பெயரதில் அடைந்த சித்திரம்
எவ்வம் எனவே வெகுமதி உருவாய்
வருணிக்கும் உரையில் பெயர்ந்த லிபியும்
மறுஉரு கொள்ளும் உயிர் போக்கி நிலைய
பதைக்கும் என ஒல்கி சிலையன்ன
கல்லாய் வடிவெடுத்து நகைக்க

No comments: