Sunday, August 18, 2013

ஆதியும் இயைபுற்று

இலையன்ன வடிவம்
ஒரு கோணம் முடிவுற
பாத்திரமாய் துடித்து
அமுதின் அமுதாய்
கடியதில்

கமழ்ந்த முதிர்வில்
அறிந்தது அயனமாய்
யாசிக்கும் குடத்துடன்
திறந்த வழியதில்
கொப்பாய் மாறி
இயைபுற்று

பிதிர் முதிர்ந்த
பிறவும் பார்க்க
இழை கோர்த்தும்
பரிதவித்த கோசம்
நுடங்கி

இசையதிர்வும் எழும்பி
புகன்ற சாமத்து
துர்வசம் போன
நிட்டை ஒருமா என
விதந்து

தருக்கும் போஜனம்
தந்தறியா சுவனமதில்
கானமும் ஒலிக்க
முள்தைக்கும் விடமோடு
முனகி

லயத்தில் கூடும்
ஓசை இனித்து
சலனமற்று துய்யும்
மீமெய்மிக உகுத்து
பிரணவமாய்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சொல்லாடல்...

Mubeen Sadhika said...

நன்றி திண்டுக்கல் தனபலாலன்