Sunday, August 11, 2013

மலிந்த வேட்கை

கூர்ந்த பாறை
குத்திய தருணம்
இன்பம் போர்த்திய
பெருவலி சுகிக்க
மரிப்பும் இன்றி
உயிர்ப்பும் ஒன்றி
பயிரானது சுவை
சாவென்னும் சாராய்
நொதித்து உதிர
நாவில் ஊறி
ரசமாய் ஓடும்
நதியில் பாய்ந்து
மண் கிளறி
மலை சரித்து
தூபம் அணைத்து
கவின் சிதைய
நெடுவரை யெவ்வம்
பிறப்பும் ஆற்றுவித்து
இறப்பின் வேட்கை
மலியும் திறமென

4 comments:

Unknown said...

மொழி சூப்பர்

Mubeen Sadhika said...

நன்றி சாய் பிரசாத்

பூங்குழலி said...

உங்களின் மொழி படிக்க அலாதியானது

Mubeen Sadhika said...

நன்றி பூங்குழலி