Sunday, September 15, 2013

பரவிய பொருளும் சிதறி

பறவையும் வெகுளி கொண்டு
துடிக்க துரத்த அம்பின் குறியாய்
மேல் கீழ் என்று குதிக்க
விரல் நுனி அழுத்தும் விசை
விருப்பின் ஓர் கனியமுதாய்
சித்திரமும் முளைத்து ஆடும்
பொறியும் புதிதாய் சமர்புரிய
வேடிக்கை கீதமும் இசைத்து
ஆதியின் பொருள் பூக்கும் காட்சியாய்
வரைந்த உலகினுள் வனைந்து
திணையும் துறையும் மறைந்து
கதுவ்வும் சீர்கெடு குன்றத்து
வெடிக்கும் படைகலன் அணிந்து
விரையும் சிறு வண்டாய்
அமரும் பெருகும் உருகும்
முழுமுதல் அகமும் ஈடாய்
பெற்றாங்கு பெற்று மிதந்து
வாகை சூடுவது முயங்கும் வார்ப்பின்
வன்கனா பரப்பில் கரையும்
பிம்பமாய்த் தகரும் சேரும்
மதியும் கூர்ந்து பொழுதும் வீணாய்
அறிவும் அழிந்து மண்ணாய்
நாமம் தன்னை மாற்றி தனதாய்
நாளும் தன்னிலை ஆற்றி உளத்தனைய
வடியும் விசித்திர சரகமதாய்

No comments: