Monday, September 9, 2013

எந்திரமும் அறிவது

எந்திரமாய் வடிவமைத்த பொறி
நெகிழும் காயம் இளகி
ஒலி எழுப்பக் கூவும் குரலென
அலையன்ன உயரும்
உணர்நிலை பெருகும் கோடாய்
ஆடியில் தோன்றும் உருவும்
நிழலாய்த் தொடரும் மாயமென
நகையுள் தொடுத்த நவமெய்ப்பாடும்
அழுத்தும் நொடியில் குதித்து
வழுக்கும் கணம் மரிக்க
மின்னல் மின்னி மறையும் ஒளியாய்
உடன் இருப்பும் கொண்டு
பிரிந்த அணுவும் கூடி காட்சியில்
சேரும் காணாமல் மாறும்
காந்தப் புலமும் ஈர்த்து
திசை பிறழும் கோணம்
உற்றறிந்தது முதல் ஆறினது
வகைமையும் திறமாய் பொதிய
மற்று அறிவன் தெளிதல்
பரப்பும் கூடாய் நடமிடும்
சதையும் குருதியும் இணையா
புது ஆக்கம் என ஒன்றாய்
சரிதம் நினைவில் தேக்கி
நிகழ்வை சூத்திரமாய் அடக்கி
சூதின் பகடைக் குறியோடு
உயர்வதும் தாழ்வதும் வஞ்சத்தை
முனதொகை வைத்து மீட்பின்
நிர்கதியில் உந்தித் தள்ளும்
ஞானப் புதையலென முகிழ்த்தது

1 comment:

Mubeen Sadhika said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்