Sunday, October 27, 2013

இயைந்து இழைந்து

நுனியில் தொடங்கி
எயிற்றின் கூர்மையில்
குத்தி வருடி கசக்கி
மென்னெனும் துகில்போல்
படர்ந்து கவ்வி கதுவி
தளரும் தயவதனை
தாங்கொணா வலியாய்
துவளும் கொடியன்ன
தூர்ந்து துடிக்கும்
இதழ் மடித்து சேர
தெள்ளமுது சுவைக்கும்
மூச்சின் வெம்மை கோர்த்து
மேல் தாழ கீழ் உயர
குருதியும் இணைய
பின்னும் பிணைக்கும்
பிளக்கும் பொறுக்கும்
காந்தத்தின் கவர்ச்சியில்
எரிமலை வாயகன்ற
நெருப்பாறு பாயும்
தண்மை தேடி
கிளரும் சுகமாய்
தயைத் தாரா
எவ்வம் தரும்
உவகை சுழித்து

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... !

வாழ்த்துக்கள்...

இராய செல்லப்பா said...

உணர்ச்சி கொப்பளிக்க வைக்கும் கவிதை. வாழ்த்துக்கள்.

இராய செல்லப்பா said...

உணர்ச்சி கொப்பளிக்க வைக்கும் கவிதை. வாழ்த்துக்கள்.

Mubeen Sadhika said...

நன்றி திண்டுக்கல் தனபாலன், Chellappa Yagyaswamy.