Sunday, November 3, 2013

மற்றும் ஒரு...

கனவென்னும் அண்டத்து உயிரி
சுருண்டு விரல்களை விரித்தது

கமலமும் மணம் பரப்பி
குழவியின் மதுரத்தில் ஆழ்ந்திருக்க
குயிலோசை குழல் மயக்கித்தூண்ட
இரவு வடிந்து வெள்ளி சிரித்து
நிலவும் ஞாயிறும் இரு கோணம் தாங்கி
வரும் புது நிகழ்வுதனை அறியா சித்திரமாய்
நிலம் அதிர பிளந்தது பாறை
நீர் சிதறி வெடித்தது அலையாய்
தழும்பி வீழ்ந்த துளி பரவியது
படர்ந்தது ஞாலத்தின் புறத்தில்
வானின் மூலையில் வெகுவேகமாய்
வளியும் அற்ற புகைவெளியில்
பறந்த ஈரம் காயும் முன்
சேர்ந்தது விண்மீனின் முனையில்
அனலில் வேகாது தீயவும் காணாது
அணுவை உள்நுழைத்து புகட்டியது
துடிப்பென்னும் ஓர் புதிரை வாழ்வென
மெய்யும் பொய்யும் மறு உருவாய்
வன்மத்தின் ஆட்சியை பறையடித்து
மீண்டும் ஓர் பிரளயம் காண

முறிந்தது சொப்பனம் வட்டப் பாதையுள்
சலித்து வேறாக்கம் கொள்ளும் அவாவுடன்

2 comments:

பூங்குழலி said...

வேறாக்கம் கொள்ளும் அவாவுடன்

எத்தனை நுட்பமான சொல் தேர்வு ...வாழ்த்துகள்

Mubeen Sadhika said...

நன்றி பூங்குழலி