Sunday, November 24, 2013

அகம் விளக்கும்

மை காயும் எழுத்தின் பொருளாய்
உரத்து ஒலிக்கா நெஞ்சின் இசையென
கண்ணீர் பெருக்கும் முகிலாய்
விடிந்தது மலரில் குவியும் ஒளியன்ன
துள்ளும் மீனாய் வேட்கையில் குதித்து
தளரும் கடலாய் அலையில் மடிந்து
வேடம் கலையும் நிலவாய் நகைத்து
பால்வெளியில் நீந்தி பருகும் பனியன்ன
குணமடுத்த பூசனையும் பெய்து கொய்ய
வனம்கடுத்த வாசமாய் மொய்க்கும் வண்டும்
விழிகாத்த வினையில் வெட்கித்தாழ
பருவம் மாறி இலையும் உதிர்த்து
பாகாய்ப் பெருகிய வெள்ளத்தில் நனைந்து
கனலும் வெகுளியாய் குளிரும் கடுத்து
பழியும் உருவெடுக்கும் அச்சத் துகிலாய்
சிதறும் துளிபோல் ஒருங்கும் குலைய
கண்ணுரு கண்டு களித்த மேனியாய்
குகை போந்து துவளும் கொடியன்ன
முள்ளும் புதராய் நீண்ட பாதையில்
சிறகொடிந்து வீழ்ந்த சிறுபறவையாய்
உவகை பெற்று விருட்டென நகரும்
யாதோ ஏனோ எவ்வுவமையோ
ஈங்கு இவண் நிலை ஈடின்றி சரிய

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா.... ரசித்தேன்...!

Anonymous said...

வணக்கம்
அருமையான கவிவரிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Mubeen Sadhika said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.
நன்றி ரூபன்