Sunday, November 10, 2013

நிகழ்வும் கழியும்

காலம் நின்றது எண்ணில்
பயணித்தது நிலையாய்
பரிணாமமாய்
நிலையற்றதில் பற்றோடு
மாறிய சேர்க்கை
ஒரு கோணம் காட்டி
குலுங்கியதில் பிரிந்து
மறு வடிவம் பெற்று
முன்னதும் ஓர்மையில் மறைந்து
பின்னதும் நிகழ்வில் கலந்து
பொழுதுகளாய்ப் புலர்ந்து
நிறமற்ற வேளைகளில் மயங்கி
கணமெனும் துடிப்பில் இமையாகி
தருணமாய் சாத்திரத்தில் பதிந்து
மணியின் நிழலாய் மௌனித்து
அவ்வமயம் என்றே அதிசயித்து
பருவங்களாய் உதிரும்
ஊழிப் பெருவலி கண்டு
நேரத்தின் நிரலில்
கழியும் தவமெனும் நிறை

No comments: