Monday, December 30, 2013

மற்றும் இணை மாறி

ஒன்றும் மற்றதுமாய் ஆதியில் நிலைகொள்ள
கண் மற்றும் ஓர் இணையாய்
செவி இரண்டென வகுத்து
உயிர் பிரிவதில் வேறாய்
வளியில் கலப்பினும் பற்றியது மற்றாய்
வாழ்தலினும் காணாது மாயத்தில்
சாதலினும் மறையாது காலத்தில்
விரவி பரவும் அடுத்த பரிமாணம்
உயிரற்றதாய் விலகிய பரிணாமம்
ஒற்றை மொழிதலில் சமனமடைந்து
கலைந்த பார்வையும் கரைந்த கேளலும்
வழிந்தது அரை முகம் கோணலுற்று
துடிப்பற்ற உடலும் குறுகி
என்பும் மறைந்து நரம்பும் முறிந்து
கல்லுமற்ற கனமுமற்ற புதுவடிவில்
ஞானம் கண்டது உணர்வின் குறிப்பை
அசைவற்ற சிந்தை அறிவது உட்பொருளை
புறமாய் இயங்கிய இருப்பின் கனிவை
ஈர்க்காது இறுகிய உக்கிர பருண்மை

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னே வரிகள்...!

வாழ்த்துக்கள்...

Mubeen Sadhika said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Anonymous said...

வணக்கம்
சிறப்பாக உள்ளது கவிதை.. வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Mubeen Sadhika said...

நன்றி ரூபன். ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்.