Sunday, March 1, 2015

விதியாய் நினைவும்

நிகர் சமன் பெற்றிருக்க
பல்லாயிரம் கிளவியும்
இச்சூத்திரம் கொண்டதறிந்து
புலன்சார் புவியின்
அழுத்தம் மேல் மிகத் தணிய
உயிர் மிகச் சேர்ந்து
மெய் மிக பாரித்து
எச்சம் எனவும் முற்று எனவும்
விதி வகுத்தும் பகுத்தும் கோர்த்தும்
விரிக்கின் வரி நீளும் ஒலிப்படுத்தி
உவர்ப்பதாங்கு ஒளியின் தூரிகையில்
மீட்டும் துறையின் பான்மை
சொல் சருக்கம் புரிந்தமைந்து
வியங்கும் அளவையும் காலமிலதாய்
சமயம் அழியும் நிலவுதலில்
வழமை பாரா நியதியும்
நினைவும் ஓர்மையும் புகுந்து கூராக்க

No comments: