Monday, March 23, 2015

சிறு மென் உலாவல்

குழறும் நாவில் மிழற்றும் பதங்கள்
வண்ணக் குவியல் பொதிந்த பளிங்குத்
தாழியினுள் முரலும் வண்டும்
சுவற்றில் மோதி ஒலி எழுப்ப
தனித்து பயணிக்கும் செம்மகள்
நீலக்கண்ணால் ஒளியை உமிழ
ஆழியின் அடியில் வெண்மணல்
நலிய பறக்கும் வட்டின் விசை
இசையில் ரீங்கரித்து நீள்கூந்தல்
உருவொன்று இடைப்பட
வெறியும் களியும் புகுந்தாட்ட
கனிவின்றி மிரளும் சிறுபேதை
கருமலர் பறித்து வீசும் கணம்
அருவம் பாய்ந்து குழல் பற்றி
இடியின் பேரரவத்தில் கூவ
அச்சம் உதிர்ந்து சாந்தமும்கூடி
நவமையப் புள்ளிகளில் தூண்டி
கரையும் மின்னலாய் நகர்ந்து
காந்தப் புலமும் சுருளும் பாதையில்
ஒற்றும் உலாவி சோதி பெருக்கி
நீரில் அலை சுழற்றி கவசத்தில் நின்று
புல்லும் ஆதியாய் விகாரமும் ஈறாய்
பல் வடிவப் புடை பெயர்வில்
சிறுமென் பகையும் தவறி வீழ
முளைத்த பிறப்பு யாவும் தொடர் அலர்தலில்

No comments: