Sunday, March 15, 2015

புலன் மருவி

நுட்பச் செதில்
செவி மருவி
ஒலித்துகள் காண
கூர் விழியும்
குழையாய் விளங்க
ஓசையும் பார்வையும்
முயங்கி விரவ
கேளலும் காணலும்
இணங்கி இணைய
முப்புலம் ஒருங்கே
உள் ஆழம் புனைந்து
அகத்தின் புலனாய்
நீளும் வீணில்
சருகின் உயிராய்
கூம்பும் காதும்
கண் எனச் சிறுத்து

No comments: